ஆப்நகரம்

ஊரடங்கை மேலும் நீட்டிக்கலாம்: டிடிவி தினகரன் யோசனை

அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தையும் உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்து விட்டு, தேவைப்பட்டால் ஊரடங்கை மேலும் சில வாரங்கள் நீடிக்க வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்

Samayam Tamil 7 Apr 2020, 2:39 pm
சென்னை: ஊரடங்கு உத்தரவை தேவைப்பட்டால் மேலும் நீடிக்கலாம் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்


கொரோனா பெருந்தொற்று பாதிப்பால் அதிகம் பாதிக்கப்பட்ட இந்திய மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் 621 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா சமூக பரவலை கட்டுப்படுத்த வருகிற 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்துள்ளார்.

இதுதொடர்பான உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, அத்தியாவசிய தேவைகளுக்கான சேவைகள் மட்டுமே இயக்கபட்டு வருகிறது. மருந்தகங்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட சேவைகளை தவிர்த்து இதர அத்தியாவசிய சேவைகளுக்கு தமிழகத்தில் நேரக்கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளை திறக்க வாய்ப்பு உள்ளதா? - அமைச்சரின் தற்போதைய அறிவிப்பு

இதனிடையே, மே, ஜூன் மாதங்களில்தான் கொரோனா தொற்று பெருமளவில் இந்தியாவில் இருக்கும் என்று பல்வேறு மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து கொண்டிருக்கின்றனர். எனவே, ஏப்ரல் 14ஆம் தேதிக்குப் பிறகு இயல்பு வாழ்க்கை முழுவதும் திரும்புமா அல்லது மேலும் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற கேள்விகள் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

இந்நிலையில், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்துக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்துவிட்டு தேவைபட்டால் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொகுதி மேம்பாட்டு நிதி ரத்து: திருமாவளவன் எதிர்ப்பு!

ஆனால், அப்படி செய்வதற்கு முன்பாக தமிழக அரசு கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சையிலும், மக்களின் வாழ்வாதாரத்துக்கான ஏற்பாடுகளை சரியான திட்டமிடுதலோடு செய்வதிலும் உரிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.


அதேபோல், அரசு அறிவித்த ரூ.1,000 இன்னும் முழுமையாக மக்களுக்கு சென்றடையாத நிலையில், ஊரடங்கை நீட்டிக்கும் போது குறைந்தபட்சம் அவர்களுக்கு உணவு கிடைப்பதற்கான ஏற்பாட்டினை திட்டமிட்டு செய்ய வேண்டும். இந்த நேரத்தில் நடமாடும் அம்மா உணவகங்களை செயல்படுத்துவது மக்களுக்கு பேருதவியாக இருக்கும் எனவும் டிடிவி தினகரன் யோசனை தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி