ஆப்நகரம்

மக்களின் உயிரோடு விளையாடக் கூடாது: டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

நடத்துனர் இல்லா பேருந்துகளை இயக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்

Samayam Tamil 15 Jun 2022, 7:13 pm
தமிழ்நாடு அரசின் போக்குவரத்துக் கழகம் பல ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில், நடத்துனர்களே இல்லாமல் பேருந்துகளை இயக்கும் திட்டம் சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த முறையில் பேருந்தில் ஏறும்போதே டிக்கெட் வழங்கப்படும். இந்தத் திட்டத்தை தமிழகம் முழுக்க விரிவுபடுத்த போக்குவரத்து கழகம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் நடத்துனருக்கான சம்பளம் உள்ளிட்ட செலவுகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Samayam Tamil டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்


இந்த நிலையில், நடத்துனர் இல்லா பேருந்துகளை இயக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாடு அரசின் விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர் இல்லா பேருந்துகளை இயக்க முடிவெடுத்து அதை அமல்படுத்தத் தொடங்கியிருக்கிறது தமிழக அரசு.
mekedatu dam: மேகதாது அணை விவகாரம்... கர்நாடக முதல்வருக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி!
சோதனை முயற்சியாக நாகப்பட்டினத்தில் இந்தத் திட்டத்தை அமல்படுத்திய முதல்நாளே சிறு விபத்து நடந்ததை எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு இந்தத் திட்டத்தை உடனடியாக தமிழக அரசு நிறுத்த வேண்டும்.

போக்குவரத்துக் கழகங்களை நஷ்டத்திலிருந்து மீட்க எவ்வளவோ வழிகள் உள்ளபோது, மக்களின் உயிரோடு விளையாடும் வகையில் ஓட்டுனர்களுக்கு மன அழுத்தத்தையும் பணிச்சுமையையும் கொடுக்கும் இத்திட்டத்தை உடனடியாக கைவிட்டு, போதிய ஊழியர்களோடு பேருந்துகள் இயங்குவதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்.” என்று பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி