ஆப்நகரம்

இரட்டை இலை வழக்கில் டிடிவி தினகரன் குற்றம் செய்ததற்கான முகாந்திரம் உள்ளது - சிபிஐ நீதிமன்றம்

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடுக்கப்பட்ட வழக்கின் மீது டிடிவி தினகரன் வருகின்ற 4ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 17 Nov 2018, 5:30 pm
ஆா்.கே.நகா் இடைத்தோ்தலின் போது இரட்டை இலை சின்னத்தை பெற டிடிவி தினகரன் லஞ்சம் வழங்க முற்பட்டதற்கான முகாந்திரம் இருப்பதால் அவரை வழக்கில் இருந்து விடுவிக்க இயலாது என்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil TTV 123


2017ம் ஆண்டு இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்ட நிலையில் ஆா்.கே.நகா் இடைத்தோ்தலின் போது இரட்டை இலை சின்னத்தை தமக்கு ஒதுக்கக் கோாி டிடிவி தினகரன் தோ்தல் ஆணைய அதிகாாிகளுக்கு ரூ.50 கோடி அளவில் லஞ்சம் கொடுக்க முயன்றதாக அவா் மீது குற்றம் சாட்டப்பட்டது.

முன்னதாக சிபிஐ அதிகாாிகள் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் டிடிவி தினகரனின் பெயா் சோ்க்கப்படாத நிலையில், இரண்டாவதாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திாிகையில் டிடிவி தினகரனின் பெயா் சோ்க்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் தனது பெயா் தவறுதலாக சோ்க்கப்பட்டது என்றும், வழக்கில் இருந்து தம்மை விடுவித்து உத்தரவிட வேண்டும் என்றும் டிடிவி தினகரன் தரப்பில் டெல்லி சிபிஐ சிறப்பு பாட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீா்ப்பு வழங்கப்பட்ட நிலையில், டிடிவி தினகரன் லஞ்சம் வழங்க முற்பட்டதற்கான முகாந்திரம் இருப்பதாக நீதிபதிகள் தொிவித்தனா்.

இதனால் இந்த வழக்கில் இருந்து டிடிவி தினகரன், இடைத்தரகா் சுகேஷ் சந்திர சேகா், மல்லிகாா்ஜூனா, குமாா் ஆகியோரை விடுவிக்க இயலாது என்று உத்தரவிட்டனா். மேலும் வழக்கு தொடா்பாக டிடிவி தினகரன் வருகின்றன டிசம்பா் 4ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொடா்ந்து டிடிவி தினகரனுக்கு எதிராக லஞ்சம் கொடுக்க முயற்சித்தல், முறைகேட்டில் ஈடுபடுதல், சதித்திட்டம் தீட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கில் இருந்து நத்து சிங், லலித்குமாா், குல்பித்குந்த்ரா உள்ளிட்ட 5 பேரை விடுவிப்பதாகவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இந்நிலையில் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், “சிலரது சதியின் காரணமாக, இரட்டை இலையை பெற லஞ்சம் கொடுத்ததாக என் மீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து என்னை விடுவிக்கச் சொல்லி நான் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.

இந்த வழக்கை தொடர்ந்து நடத்தி, இது பொய் வழக்குதான் என்பதை நீதிமன்றம் மூலம் நிரூபிப்பேன்” என்று தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி