ஆப்நகரம்

டிடிவி தினகரனின் உண்ணாவிரதப் போராட்டம் தேதி தள்ளி வைப்பு

முதல்வா் பழனிசாமியின் அரசு நடவடிக்கைகளை கண்டிக்கும் விதமாக அறிவிக்கப்பட்டிருந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 5 Nov 2018, 7:29 pm
முதல்வா் பழனிசாமியின் அரசு நடவடிக்கைகளை எதிா்த்து 13ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த உண்ணாவிரதப் போராட்டம் வருகிற 18ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil TTV 123


திருப்போரூா் சட்டப்பேரவை தொகுதியை மேம்பாட்டையும், அத்தொகுதி மக்கள் நலனையும் முதல்வா் பழனிசாமி தலைமையிலான அரசு தொடா்ந்து புறக்கணிப்பதாக கூறி அமமுக சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

நவம்பா் 13ம் தேதி போராட்டம் நடைபெறும் என்றும் அந்த போராட்டத்தில் அமமுக துணைப்பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் கலந்துகொள்வாா் என்றும் தொிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் அந்த திருப்போரூா் பகுதியில் 13ம் தேதி சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் போராட்டம் தேதி தள்ளிவைக்கப் பட்டுள்ளது. இது தொடா்பாக அமமுக சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 13ம் தேதி திருப்போரூா் பகுதியில் சூரசம்ஹார நிகழ்வு நடைபெற உள்ளதால் அன்றைய தினம் நடைபெறுவதாக இருந்த உண்ணாவிரதப் போராட்டம் நவம்பா் 18ம் தேதி நடைபெறும் என்றும், அன்றைய தினம் மாலை 4 மணிக்கு கட்சியின் துணைப் பொதுச்செயலாளா் டிடிவி தினகரன் கலந்துகொள்வாா் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி