ஆப்நகரம்

நாஞ்சில் சம்பத் விலகியது வருத்தமளிக்கிறது: டிடிவி தினகரன்

அமைப்பின் பெயரைக் காரணம் காட்டி நாஞ்சி சம்பத் விலகியது, வருத்தமளிப்பதாகவும் திராவிடத்தை நாங்கள் புறக்கணிக்கவில்லை என்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 17 Mar 2018, 1:05 pm
அமைப்பின் பெயரைக் காரணம் காட்டி நாஞ்சி சம்பத் விலகியது, வருத்தமளிப்பதாகவும் திராவிடத்தை நாங்கள் புறக்கணிக்கவில்லை என்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil ttv dinakaran about nanjil sambath
நாஞ்சில் சம்பத் விலகியது வருத்தமளிக்கிறது: டிடிவி தினகரன்



அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் டிடிவி தினகரன் தனியாக அமைப்பு ஒன்றை துவங்கினார். இதையடுத்து திராவிடத்தையும் அண்ணாவையும் தினகரன் புறக்கணித்து விட்டதாக கூறி, அவருடைய அணியிலிருந்து நாஞ்சில் சம்பத் விலகினார்.

இந்நிலையில், இன்று டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அபபோது அவர் பேசியதாவது, ‘நாஞ்சில் சம்பத் எங்கள் அணியிலிருந்து விலகியது வருத்தம் அளிக்கிறது. ஆனால், திராவிடத்தை புறக்கணித்துவிட்டதாக நாஞ்சில் சம்பத் கூறுவதை ஏற்க முடியாது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்று பெயர் சூட்டியிருப்பது தற்காலிக ஏற்பாடு தான்.

அதிமுகவையும் சின்னத்தையும் மீட்டெடுப்பது தான் எங்கள் இலக்கு என்பதை ஆரம்பம் முதலே சொல்லி வருகிறோம். ஜெயலலிதாவுக்கும் திராவிடத்துக்கும் தொடர்பு இல்லாதது போல் நாஞ்சில சம்பத் பேசியுள்ளார். இது எங்களுக்கு வருத்தமளிக்கிறது. நாங்கள் பரிந்துரைத்த கட்சிப் பெயர்களில் திராவிடம் இருந்தது. ஆனால், அந்த பெயர் எங்களுக்கு கிடைக்கவில்லை.

இவ்வாறு டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி