ஆப்நகரம்

ஜெயலலிதா உருவப்பட திறப்பு விழாவில் கலந்துகொள்ளாத டிடிவி தினகரன் , கருணாஸ் !

ஜெயலலிதாவின் திருஉருவப்படத் திறப்பு விழாவில் டிடிவி தினகரன் மற்றும் கருணாஸ் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை.

Samayam Tamil 12 Feb 2018, 12:55 pm
ஜெயலலிதாவின் திருஉருவப்படத் திறப்பு விழாவில் டிடிவி தினகரன் மற்றும் கருணாஸ் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை.
Samayam Tamil ttv dinakaran and karunas not attended jayalalitha photo opening ceremony
ஜெயலலிதா உருவப்பட திறப்பு விழாவில் கலந்துகொள்ளாத டிடிவி தினகரன் , கருணாஸ் !


சட்டபேறவையில் இன்று ஜெயலலிதா உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது. அவரது படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை திறக்கக் கூடாது என்று எதிர்கட்சிகள் தெரிவித்தனர். மேலும் திமுக ,காங்ரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்த விழாவை புறக்கணித்தனர்.

7 அடி 5 அங்குளம் உயரத்தில் கம்பீரமாக காட்சி அளிக்கும் அவரது படம் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் இருக்கைக்கு எதிராக வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விழாவில் டிடிவி தினகரன் கலந்துகொள்ளவில்லை . மேலும் அதிமுக சின்னத்தில் போட்டியிட்ட கருணாஸ் கலந்துகொள்ளவில்லை .
அதிமுக தரப்பில் இருந்து அழைப்பு வராததால் டிடிவி தினகரன் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருணாஸ் இந்த விழாவில் கலந்துகொள்ளாதது அதிக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி