ஆப்நகரம்

டிடிவி தினகரன் தலைமையில் 18 எம்.எல்.ஏக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம்!

தகுதி நீக்கம் குறித்து 18 எம்.எல்.ஏக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம், அமமுக துணை பொது செயலாளர் தினகரன் தலைமையில் இன்று நடைபெற்று வருகிறது.

Samayam Tamil 26 Oct 2018, 1:37 pm
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுப்பதற்காக டிடிவி தினகரன் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
Samayam Tamil dhinakaran1-kRmB--621x414@LiveMint
டிடிவி தினகரன் தலைமையில் 18 எம்.எல்.ஏக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம்!


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து ஆளுநரிடம் மனு கொடுத்த 18 அதிமுக எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுத்தார். இதுதொடர்பான வழக்கில், தகுதி நீக்க நடவடிக்கை சரியானதுதான் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் டி.டி.வி.திகரனை ஆதரித்த 18 எம்.எல்.ஏ.க்களும் தற்போது பதவியை இழந்துள்ளனர்.

இந்நிலையில் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதா? அல்லது தேர்தலை சந்திப்பதா என அமமுக கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

மதுரை ஹோட்டலில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து வரும் எம்.எல்.ஏ.க்களான பிரபு, கலைச்செல்வன், ரத்தின சபாபதி ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதையடுத்து அனைவரின் கருத்துக்களையும் கேட்டறிந்த பின்னர், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து டிடிவி தினகரன் உரிய முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி