ஆப்நகரம்

என்ன திமுகவினரே? ஆர்.கே.நகர் மறந்து போயிடுச்சா? வாங்க மோதிப் பாக்கலாம் - டிடிவி தினகரன்!

திருவண்ணாமலை: விரைவில் வரவுள்ள இடைத்தேர்தல் வெற்றி தொடர்பாக திமுகவை டிடிவி தினகரன் வம்புக்கு இழுத்துள்ளார்.

Samayam Tamil 27 Jan 2019, 5:54 pm
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், திருவண்ணாமலையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மக்களவை தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
Samayam Tamil TTV Dinakaran


இவை கருத்து திணிப்புகள். வரும் மக்களவைத் தேர்தல், 21 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் என அனைத்திலும் அமமுக வெற்றி பெறும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கருத்துக் கணிப்புகளைப் பொய்யாக்கி வெற்றி பெற்றதை மறந்து விடக் கூடாது.

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை தீர்க்க அரசு முயற்சிக்க வேண்டும். அதை விடுத்து, போராடுபவர்களைக் கைது செய்வது ஜனநாயகத்திற்கு விரோதமானது. பேசித் தீர்ப்பதே நல்லது. இந்த சர்வாதிகார போக்கிற்கு அரசு பின்பலன்களை அனுபவிக்கும்.

எங்களுக்கு சின்னம் வழங்குவதில் தேர்தல் ஆணையம் நடுநிலையாக நடந்து கொள்வது இல்லை. குறிப்பாக தமிழகத்தில் எங்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. உச்சநீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு வரும். மக்களவைத் தேர்தலுக்காக சில கட்சிகளுடன் பேசிக் கொண்டிருக்கிறோம்.

அது முழுமை அடைந்தவுடன் உங்களுக்கு தெரிவிப்பேன். ரத்தமும், சதையுமான தொண்டர்கள் எங்களுடன் இருக்கின்றனர் என்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி