ஆப்நகரம்

குக்கரை ஆதரித்த மக்களைத் தேடி வரும் ரூ.10,000

ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற வைத்த அத்தொகுதி மக்களுக்கு தினகரன் தரப்பில் தலா ரூ.10,000 கொடுத்து நன்றி தெரிவிக்கும் ரகசிய வேலை நடப்பதாகவும் கூறப்படுகிறது.

TNN 3 Jan 2018, 3:13 am
ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற வைத்த அத்தொகுதி மக்களுக்கு தினகரன் தரப்பில் தலா ரூ.10,000 கொடுத்து நன்றி தெரிவிக்கும் ரகசிய வேலை நடப்பதாகவும் கூறப்படுகிறது.
Samayam Tamil ttv dinakaran factions post election giveaway
குக்கரை ஆதரித்த மக்களைத் தேடி வரும் ரூ.10,000


சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தினகரன் அதிசய வெற்றி பெற்றார். டிசம்பர் 29ஆம் தேதி எம்எல்ஏ பதவியை ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில், குக்கரில் வாக்கு குத்தி தன்னை எம்எல்ஏ ஆக்கிய மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்ற பெயரில் தினகரன் தரப்பில் ஆர்.கே.நகரில் தலா ரூ.10,000 ஆயிரம் பணப்பட்டுவாட செய்யப்போவதாக தகவல் கசிந்துவிட்டது.

தேர்தல் நடப்பதற்கு முன் கடைசி நேரத்தில் வாக்களார்களுக்கு 20 ரூபாய் நோட்டுகளை டோக்கன்களாக கொடுத்தது டிடிவி தினகரன் கும்பல். அப்போது, வெற்றி பெற்றதும் பெரிய தொகையைக் கொடுத்து கவனிப்பதாக உறுதி கூறியதாகக் கூறப்படுகிறது.

இதன்படி, 20 ரூபாய் டோக்கன் இருக்கும் அனைவருக்கும் காதும் காதும் வைத்தாற்போல ரூ.10 ஆயிரம் கைமாறப்போகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, புதன்கிழமை மாலை ஆர்.கே.நகரின் புதுவண்ணாரப்பேட்டை, செரியன் நகர் பகுதிகளுக்குச் சென்று தினகரன் நன்றி கூறப்போவதாக தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி