ஆப்நகரம்

துரோகமும் துரோகமும் கூட்டணி வைத்து நடக்கும் ஆட்சி: டிடிவி தினகரன்

அதிமுக கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் இன்று காலை நடைப்பெற்றது. இதைத்தொடர்ந்து நிருபர்களுக்குப் பேட்டியளித்த டிடிவி தினகரன் துரோகமும் துரோகமும் கூட்டணி வைத்து நடக்கும் ஆட்சி என விமர்சித்துள்ளார்.

TNN 12 Sep 2017, 12:48 pm
சென்னை: அதிமுக கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் இன்று காலை நடைப்பெற்றது. இதைத்தொடர்ந்து நிருபர்களுக்குப் பேட்டியளித்த டிடிவி தினகரன் துரோகமும் துரோகமும் கூட்டணி வைத்து நடக்கும் ஆட்சி என விமர்சித்துள்ளார்.
Samayam Tamil ttv dinakaran has commented on the general council meeting that happened today
துரோகமும் துரோகமும் கூட்டணி வைத்து நடக்கும் ஆட்சி: டிடிவி தினகரன்


மிகுந்த எதிர்ப்பார்ப்பிற்கு இடையே இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் குறிப்பாக டிடிவி தினகரனின் நியமனங்கள் ரத்து செய்தும், சசிகலாவின் பொதுச்செயலாளர் நியமனமும், டிடிவி தினகரனின் நியமனமும் செல்லாது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில் நிருபர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், இது பொதுக்குழு கூட்டமல்ல சாதாரணக் கூட்டம் எனத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “பொதுக்குழுவைக் கூட்டும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு மட்டுமே உள்ளது. அவர் இல்லாததால் துணைப் பொதுச் செயலாளரான எனக்கு மட்டுமே உள்ளது. பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு உட்பட்டவை என்பதால், உயர்நீதிமன்றம் முடிவெடுக்கும்வரை அவை செல்லாது.

தற்போது நடைபெறும் ஆட்சி அம்மாவின் ஆட்சி அல்ல. அனிதாவின் மரணத்தின்போது என்னை சந்தித்த மக்கள் தற்போதைய ஆட்சியை விரும்பவில்லை என்று என்னிடம் கூறினார். ஆட்சியைக் கலைத்து தேர்தலைச் சந்தித்தால், அவர்கள் டெபாசிட் கூட வாங்கமாட்டார்கள்”, எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “துரோகமும் துரோகமும் கூட்டணி வைத்து நடக்கும் ஆட்சி இது. இதை வீட்டிற்கு அனுப்பும் வேலைகளைச் செய்யத் தொடங்கிவிட்டேன்”. எனத் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரனுக்கு 21 எம்எல்ஏக்கள் ஆதரவுள்ள நிலையில், எடப்பாடி ஆட்சி பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவும், இதனால் ஆளுநர் சட்டமன்றத்தைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடவில்லையெனில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

TTV Dinakaran has commented on the General council meeting that happened today.

அடுத்த செய்தி