ஆப்நகரம்

சசிகலா மீதான விமர்சனம்: லேட்டாக பொங்கிய டிடிவி தினகரன்

சசிகலா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்து பேசிய குருமூர்த்திக்கு டிடிவி தினகரன் பதிலளித்துள்ளார்.

Samayam Tamil 16 Jan 2021, 2:32 pm
ஜனவரி 14 ஆம் தேதி துக்ளக் விழாவில் பேசிய அதன் ஆசிரியர் குருமூர்த்தி, சசிகலாவையும், அமமுகவையும் சாக்கடை என்று பொருள்படும் படி பேசியிருந்தார். இதற்கு சமூக தளங்களில் அமமுகவினரும், சசிகலா ஆதரவாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
Samayam Tamil sasikala


சர்ச்சைக்குரிய வகையில் பேசி அவ்வப்போது தனது இருப்பை காட்டி வருகிறா குருமூர்த்தி என முன்வைக்கப்படுகின்றன. ஆனால் இது குறித்து டிடிவி தினகரன் கருத்து எதுவும் கூறாமல் இருந்தார். இவ்வளவு தூரம் பேசியும் தினகரன் ஏன் மௌனம் காக்கிறார் என விமர்சனங்கள் எழுந்தன. இதனால் தினகரன் குருமூர்த்திக்கு இன்று (ஜனவரி 16) பதில் அளித்துள்ளார்.

“ஒரு சிலர் தங்களைத் தாங்களே அதிமேதாவிகளாக, பவித்திரர்களாக பாவித்துக்கொண்டு பதற்றத்தில் பிதற்றுவதற்கெல்லாம் பதில் சொல்லி நமது நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் பலரும் நமது கருத்தைச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பதால் எனது கருத்தை இங்கே பதிவிடுகிறேன்.

பாலியல் வழக்கு: திருப்பூருக்கு திருப்பிவிடப்படும் பொள்ளாச்சி ஜெயராமன்

ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக அரசியல் விமர்சகராக, துக்ளக் இதழின் நிறுவன ஆசிரியராகஇருந்த சோ அவர்கள், தனது இறுதி மூச்சு வரை கடுமையான விமர்சனங்களைக் கூட நகைச்சுவை உணர்வோடும் நாகரிக எல்லையைத் தாண்டாமலும் செய்த பெருமைக்குரியவர்.

அவரைத் தனது ஆசானாகச் சொல்லிக்கொண்டு, துக்ளக் ஆசிரியராக இருக்கும் குருமூர்த்தி, கடந்த சில ஆண்டுகளாகப் பயன்படுத்தும் வார்த்தைகள் அவரது நிஜமான தரத்தைக் காட்டுவதாகவும், சோ அவர்களின் பெயருக்கே களங்கம் விளைவிப்பதாகவும் இருந்து வருகிறது.

கங்கை நீர் எது? சாக்கடை நீர் எது? மாஃபியா யார்? என்பதையெல்லாம் முடிவு செய்ய வேண்டியது தமிழ்நாட்டு மக்கள்தானே தவிர, கங்கை புத்திரன் பீஷ்மராகவே தன்னை பாவித்துக்கொள்ளும் குருமூர்த்தி போன்ற மனநிலை கொண்டவர்கள் அல்ல !

தமிழ்நாட்டில் இனி ஒருவாரம் இப்படித்தான் இருக்கும்: வானிலை ஆய்வு மையம்!

துக்ளக் விழாவில், அதன் ஆசிரியராக இருப்பவர் கையூட்டுப் பெற்றுக்கொண்டு பேசியதாக ஜெயக்குமார் போன்றவர்களெல்லாம் விமர்சிக்கும் அளவுக்கு குருமூர்த்தியின் தரம் தாழ்ந்து போனது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி