ஆப்நகரம்

"உங்களது பினாமி ரகசியம் வெளியிடப்படும்"- மன்னார்குடி கூடத்தில் தினகரன் ஆவேசம்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்தால் அதில் 200 தொகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.

Samayam Tamil 5 Aug 2018, 9:23 pm
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்தால் அதில் 200 தொகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.
Samayam Tamil 6cc1e114-8709-4322-af91-6709b59d93b2.
”தினகரன் சிரித்துக்கொண்டே இருக்கிறான் என்று எண்ணிவிட வேண்டாம்”


மன்னார்குடியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அந்த கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உட்பட பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அப்போது பேசி டிடிவி தினகரன், சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அமமுக-வின் முதல் வெற்றி பொதுகூட்டம் தனது சொந்த மண்னான மன்னார்குடியில் நடக்கும் என்று தெரிவித்தார்.

அடுத்தடுத்த நாட்களில் அம்மா மக்கள் முன்னேற்றம் கழகத்தில் நிச்சயம் 2 கோடி உறுப்பினர்களை விரைவில் சேர்ப்போம் என்று தெரிவித்த தினகரன், தங்களை தோற்கடிக்க நினைத்தால் அது நடக்காது என்று தெரிவித்தார்.

டிடிவி தினகரன் கூட்டத்தில் காணப்பட்ட ஆதரவாளர்கள் கூட்டம்


அமமுக-விற்கு எதிராக களம் காணும் கட்சியினர் திருப்பரங்குன்றத்தில் ஒரு ஓட்டுக்கு ரூ. 10 ஆயிரம் வேண்டுமானாலும் விநியோகம் செய்யட்டும், நிச்சயம் நாங்கள் தான் வெற்றி பெறுவோம்.

காவிரி ஆற்று படுகையில் விவசாயத்தை தவிர வேறு எதையும் அனுமதிக்கப்பட்டோம். இந்த மண்ணில் வைரமே கிடைத்தாலும் வேண்டாம். விவசாயத்தை தவிர வேறு எதையும் நாங்கள் கேட்கவில்லை.

எப்போதும் தினகரன் சிரித்த முகத்துடனே இருக்கிறான் என்று நினைத்திட வேண்டாம், உங்களது பினாமி ரகசியம் அத்தனையும் நான் அறிவேன். விரைவில் அது வெளியிடப்படும் என,

முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பி. பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை குறிப்பிட்டு மேடையில் பேசினார் டிடிவி தினகரன்.

அடுத்த செய்தி