ஆப்நகரம்

அதிமுகவில் பரபரப்பு: சசிகலா- தினகரன் சந்திப்பு

சிறையில் இருக்கும் அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலளர் சசிகலாவை , துணைப்பொதுச் செயலாளர் தினகரன் சந்தித்து பேசினர்.

TNN 15 Jun 2017, 7:07 pm
சென்னை : சிறையில் இருக்கும் அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலளர் சசிகலாவை , துணைப்பொதுச் செயலாளர் தினகரன் சந்தித்து பேசினர்.
Samayam Tamil ttv dinakaran meets sasikala
அதிமுகவில் பரபரப்பு: சசிகலா- தினகரன் சந்திப்பு


முதல்வராக இருந்த ஜெயலலிதா மறந்த பிறகு அதிமுக இரண்டு அணிகளாக உடைந்தது. மேலும் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவும், இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் தினகரன் சிறைக்கு சென்ற பிறகு அதிமுக ஓபிஎஸ், இபிஎஸ், டிடிவி என மூன்று அணிகளாக பிளவுப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பெங்களூர் பார்பன அஹ்ரகார சிறையில் இருக்கும் அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலளர் சசிகலாவை , துணைப்பொதுச் செயலாளர் தினகரன் சந்தித்து பேசினர். இந்த சத்திப்பில் ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமியும் , கட்சிக்கும் தினகரனும் என்று சசிகலாவிடம் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த ஜூன் 5-ல் தான் சசிகலா- தினகரன் சந்திப்பு நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி , தினகரன் ஆதரவு எம்.எல்.ஏகள் சந்தித்து கட்சியில் தினகரனுக்கு முக்கியதுவம் கொடுத்தால் தான் குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிக்க முடியும் என்று கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி