ராஜஸ்தானில் கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் பரிதாபமாக உயிரிழந்த காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனின் சமாதியில் டிடிவி தினகரன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் விசாரணையில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிக்க தமிழக போலீஸாரின் தனிப்படை ராஜஸ்தான் சென்றது. அங்கு கொள்ளையர்களைப் பிடிக்கும் முயற்சியில் காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் துப்பாக்கியால் சுடப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்ட பெரியபாண்டியனின் உடலுக்கு அரசியல் பிரபலங்கள் அனைவரும் அஞ்சலி செலுத்திய நிலையில், டிடிவி தினகரன் நெல்லை மூவிருந்தாளிசாலைப்புதூரில் உள்ள பெரியபாண்டியனின் சமாதியில் இன்று அஞ்சலி செலுத்தினார்.
சென்னையில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் விசாரணையில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிக்க தமிழக போலீஸாரின் தனிப்படை ராஜஸ்தான் சென்றது. அங்கு கொள்ளையர்களைப் பிடிக்கும் முயற்சியில் காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் துப்பாக்கியால் சுடப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்ட பெரியபாண்டியனின் உடலுக்கு அரசியல் பிரபலங்கள் அனைவரும் அஞ்சலி செலுத்திய நிலையில், டிடிவி தினகரன் நெல்லை மூவிருந்தாளிசாலைப்புதூரில் உள்ள பெரியபாண்டியனின் சமாதியில் இன்று அஞ்சலி செலுத்தினார்.