ஆப்நகரம்

திருவாரூரில் திமுகவிற்கு ஷாக் கொடுக்க தயாராகிறாரா டிடிவி தினகரன்...? 31ல் காத்திருக்கு அதிரடி!

சென்னை: வரும் இடைத்தேர்தலில் வெற்றி பெற டிடிவி தினகரன் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார்.

Samayam Tamil 1 Jan 2019, 12:34 pm
முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி காலமானதால், திருவாரூர் சட்டசபை தொகுதி காலியானது. இதற்கான இடைத்தேர்தல் வரும் 28ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Samayam Tamil TTV Dinakaran


இந்த தொகுதியை தக்க வைக்க திமுக விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆர்.கே.நகரில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வெற்றி வாகை சூடிய டிடிவி தினகரன், திருவாரூரில் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்தவர் டிடிவி தினகரன். தனது சொந்த மாவட்டத் தொகுதி என்பதால், நிச்சயம் அமமுக போட்டியிடும் என்று கூறப்படுகிறது. இந்த கட்சியினர் பல மாதங்களாக திருவாரூர் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்த தகவல் திமுகவினருக்கு சற்று கலக்கமடையச் செய்யக்கூடிய வகையில் இருக்கலாம். ஆனால் திருவாரூர் தொகுதி மக்கள் பாரம்பரியமாக திமுகவிற்கு வாக்களித்து வருகின்றனர்.

கடந்த சட்டசபை தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திருவாரூரில் வெற்றி பெற்றவர் கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் டிடிவி தினகரனின் அமமுக கட்சி, எந்த அளவிற்கு ஆச்சரியப்படுத்த காத்திருக்கிறது என்பதை வரும் 31ஆம் தேதி தெரிந்து கொள்ளலாம்.

அடுத்த செய்தி