ஆப்நகரம்

சசிகலா குற்றமற்றவர்; நீதி விசாரணை மூலம் நிரூபிப்பார்: டிடிவி தினகரன்...!

நீதி விசாரணை மூலம் சசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபிப்பார் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

TNN 18 Aug 2017, 3:55 pm
சென்னை: நீதி விசாரணை மூலம் சசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபிப்பார் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil ttv dinakaran press meet after sasikala meet
சசிகலா குற்றமற்றவர்; நீதி விசாரணை மூலம் நிரூபிப்பார்: டிடிவி தினகரன்...!


சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா அடைக்கப்பட்டுள்ளார். அவர் இன்று தனது பிறந்தநாளை சிறையில் கொண்டாடினார்.

இதற்கிடையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து, நீதி விசாரணைக்கு முதலமைச்சர் பழனிச்சாமி நேற்று உத்தரவிட்டிருந்தார். மேலும் அவர் வாழ்ந்த வேதா இல்லத்தையும் நினைவில்லமாக மாற்றப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த சூழலில் அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், சசிகலாவை பெங்களூரு சிறையில் சந்திக்க சென்றார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அவசர கதியில் ஜெ., இல்லத்தை நினைவிடமாக அறிவித்துள்ளதாக குறிப்பிட்டார். தங்கள் பதவியை காப்பாற்றிக் கொள்ள இணைந்தால், அதன் ஆயுட்காலம் நீடிக்காது என்று கூறினார்.

ஓ.பன்னீர்செல்வத்தை அமைச்சர்கள் சந்திப்பதில் ஒன்றும் இல்லையே என்றும் தெரிவித்தார். நீதி விசாரணை மூலம் பொதுச்செயலாளர் சசிகலா குற்றமற்றவர் என நிரூபணமாகும் என்று தெரிவித்த அவர், எடப்பாடி அணியில் சிலிப்பர் செல் போல் எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள் என்றும், தேவைப்பட்ட நேரத்தில் ஆதரவாக வருவார்கள் என்றும் டிடிவி தினகரன் கூறினார்.

TTV Dinakaran press meet after Sasikala meet.

அடுத்த செய்தி