ஆப்நகரம்

”சென்னை வந்தடைந்தார் டிடிவி தினகரன்”: விசாரணைக்காக மத்திய அரசு விடுதியில் தங்க வைப்பு..!

டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையினரால் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட டிடிவி தினகரன், அடுத்த கட்ட விசாரணைக்காக பெசன்ட் நகரில் உள்ள மத்திய அரசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

TNN 27 Apr 2017, 2:42 pm
டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையினரால் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட டிடிவி தினகரன், அடுத்த கட்ட விசாரணைக்காக பெசன்ட் நகரில் உள்ள மத்திய அரசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
Samayam Tamil ttv dinakaran reached chennai with delhi police
”சென்னை வந்தடைந்தார் டிடிவி தினகரன்”: விசாரணைக்காக மத்திய அரசு விடுதியில் தங்க வைப்பு..!


இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தர லஞ்சம் வாங்கியதாக தலைநகர் டெல்லியில் சுகேஷ் சந்திரா என்பவர் டெல்லி குற்றப்பிரிவு போலீசாரால் அண்மையில் கைது செய்யப்பட்டார். அவரிடம் ரூ.1.30 கோடி ரூபாயையும் டெல்லி போலீசார் பறிமுதல் செய்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும், அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் டிடிவி தினகரனிடம் விசாரணை நடத்திய டெல்லி போலிசார், நேற்று முன் தினம் இரவு அவரையும் அவரது நண்பர் மல்லிகார்ஜுனா ஆகியோரை கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து இருவரையும் ஐந்து நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்த டெல்லி போலிசார், அவர்களை இன்று மதியம் 1 மணியளவில் விமானம் மூலம் சென்னைக்கு விசாரணைக்காக அழைந்து வந்தனர். சென்னை விமான நிலையத்திலிருந்து நேராக பெசன்ட் நகரில் உள்ள மத்திய அரசு விடுதிக்கு இருவரும் அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்கு வைத்து தினகரனிடம் குறைந்தது இரண்டு நாட்களாவது விசாரணை நடைபெறும் என கூறப்படுகிறது. இதே விடுதியில் தினகரனின் நண்பர் மல்லிகார்ஜுனாவிடமும் டெல்லி குற்றப்பிரிவு போலிசார் விசாரணை நடத்த உள்ளனர்.

சென்னையில் விசாரணை முடிந்த பின்னர் அடுத்தகட்டமாக தினகரன், பெங்களூருவில் உள்ள அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவின் வீட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்படுவார் என கூறப்படுகிறது.

பெசன்ட் நகர் மத்திய அரசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள தினகரனை பார்ப்பதற்கு நாஞ்சில் சம்பத்தை தவிர்த்து வேறு எந்த ஆளுங்கட்சி பிரமுகர்களும் வரவில்லை.


TTV Dinakaran reached Chennai with Delhi Police

அடுத்த செய்தி