ஆப்நகரம்

TTV Dinakaran: பாஜகவுடன் கூட்டணி அமையாத விரக்தியில் பேசுகிறார் மு.க.ஸ்டாலின் - டிடிவி தினகரன்!

திமுகவின் புதிய தலைவராக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலின், பாஜகவுடன் கூட்டணி அமையவில்லை என்ற விரக்தியில் பாஜகவை விமர்சித்து பேசியதாக அமமுக கட்சியின் நிறுவனர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

Samayam Tamil 29 Aug 2018, 5:11 pm
சென்னை: திமுகவின் புதிய தலைவராக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலின், பாஜகவுடன் கூட்டணி அமையவில்லை என்ற விரக்தியில் பாஜகவை விமர்சித்து பேசியதாக அமமுக கட்சியின் நிறுவனர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
Samayam Tamil பாஜகவுடன் கூட்டணி அமையாத விரக்தியில் பேசுகிறார் மு.க.ஸ்டாலின்: டிடிவி தினகரன்!
பாஜகவுடன் கூட்டணி அமையாத விரக்தியில் பேசுகிறார் மு.க.ஸ்டாலின்: டிடிவி தினகரன்!


கலைஞா் கருணாநிதி மறைவைத் தொடா்ந்து, தி.மு.க.வின் முதல் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், திமுக கட்சியின் புதிய தலைவராக மு.க.ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் போட்டியின்றி தேர்வாகினர்.

இதையடுத்து பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், “பகுத்தறிவு, சுயமரியாதை, சமத்துவம், சமூக நீதி என்ற நான்கு தூண்களை அடிப்படையாக கொண்டது திமுக. திராவிடம், சமத்துவம், சுயமரியாதை கொள்கைகளை நான் உயர்த்திப்பிடிப்பேன்.

மத்திய அரசும் மாநில அரசுகளும் அதற்கு எதிராக செயல்படுகின்றன. தமிழகத்தில் சுயமரியாதைக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது. அதிமுக சுயமரியாதையை இழந்து, தமிழகத்தை கூர் போட்டு விற்றுக்கொண்டு இருக்கிறது. சமூகத் தீமைகளை அகற்றுவதே நமது முதல் கடமையாகும். இந்தியா முழுவதும் காவி வண்ணம் பூச நினைக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும்” என்று தெரிவித்தார். இதையடுத்து, புதிதாக தலைவர் பதவியேற்ற மு.க.ஸ்டாலினையும், அவரது பேச்சையும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பாராட்டி கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக கட்சியின் நிறுவனர் டிடிவி தினகரன், மு.க.ஸ்டாலினை சரமாரியாக தாக்கி பேசியுள்ளார். அவர் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது, “மு.க.ஸ்டாலின் பல ஆண்டுகளாக அரசியலில் உள்ளார். கருணாநிதி இருக்கும்போதே, திமுகவின் அடுத்தத் தலைவராக அறியப்பட்டவர் மு.க.ஸ்டாலின். இப்போது, ஏதோ புதிதாக அரசியலுக்கு வந்தது போல், திருடர்கள் ஆட்சி, பகல் கொள்ளை நடக்கும் ஆட்சி என்றெல்லாம் கூறுகிறார்.

மு.க.ஸ்டாலின் வாஜ்பாயிக்கு அஞ்சலி செலுத்த டி.ஆர்.பாலுவுடன் டெல்லி சென்றபோது, நீண்ட நேரம் காத்திருந்து அமித் ஷாவை சந்தித்தார். அப்போது, அமித் ஷா கருணாநிதியின் புகழஞ்சலிக்கு வருவதாக கூறிவிட்டு, வேறொருவரை அனுப்பியுள்ளதால், தமிழகத்தில் காவி வண்ணம் அடிக்க விடமாட்டோம் என கோபத்தில் பேசியுள்ளார். கூட்டணி அமைக்க முயன்று, அது முடியாமல் போன விரக்தியில் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்” என தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரனின் இந்தக் கருத்துகளால் திமுக தொண்டர்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர்.

அடுத்த செய்தி