ஆப்நகரம்

ஓட்டுக்காக ‘காமாட்சி’ விளக்கு: டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் 3 பேர் கைது

ஆர்.கே.நகரில் ஓட்டுக்காக ‘காமாட்சி’ விளக்கு கொடுத்த டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

TNN 1 Apr 2017, 12:35 pm
சென்னை: ஆர்.கே.நகரில் ஓட்டுக்காக ‘காமாட்சி’ விளக்கு கொடுத்த டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
Samayam Tamil ttv dinakaran supporters arrested for giving kamatchi light to voters in rk nagar
ஓட்டுக்காக ‘காமாட்சி’ விளக்கு: டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் 3 பேர் கைது


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தை அடுத்து, ஆர்.கே.நகர் தொகுதி காலியானது. அதற்கு வரும் ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. பிளவுபட்ட அதிமுக சார்பில் டிடிவி தினகரனும், மதுசூதனனும், திமுக சார்பில் மருது கணேஷ், மார்க்சிஸ்ட் சார்பில் லோகநாதன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். பல்வேறு கட்சிகள் சார்பில் தீவிர வாக்கு சேகரிப்பு நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையமும், காவல்துறையும் ஆர்.கே.நகர் பிரசாரத்தை கவனித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆர்.கே.நகர் 40வது வார்டில் திருவள்ளுவர் குடியிருப்பு பகுதியில் நேற்று இரவு வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் கொடுப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து பறக்கும் படை அதிகாரி மோகன் அப்பகுதிக்கு சென்றார். அப்போது அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த சிலர் வீடு வீடாக காமாட்சி விளக்கு வழங்கி வந்ததை கண்டனர். இதனைத் தொடர்ந்து சிவகுமார், பிரசன்னா, கோபிநாத் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 கார்கள், ஒரு இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

TTV Dinakaran supporters arrested for giving Kamatchi light to voters in RK Nagar.

அடுத்த செய்தி