ஆப்நகரம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, வரும் 25ல் டிடிவி தினகரன் தஞ்சையில் உண்ணாவிரதம்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, டிடிவி தினகரன் உண்ணாவிரதம் மேற்கொள்கிறார்.

Samayam Tamil 17 Mar 2018, 7:16 pm
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, டிடிவி தினகரன் உண்ணாவிரதம் மேற்கொள்கிறார்.
Samayam Tamil ttv dinakaran will do fasting for cauvery management board on 25th
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, வரும் 25ல் டிடிவி தினகரன் தஞ்சையில் உண்ணாவிரதம்!


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் ஜீவாதார உரிமையான காவிரி நதி நீரை பெறுவதில், வைராக்கிய உணர்வோடு போராடிய ஜெயலலிதாவை இத்தருணத்தில் வணங்குகிறோம்.

காவிரி பிரசனையில் நீண்ட நெடிய சட்டப் போராட்டத்தில், கடந்த 16.02.2018ஆம் தேதியன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் 177.25 டி.எம்.சி என்ற அளவில் நமக்கு நீரின் அளவு ஒதுக்கப்பட்டது வேதனை அளிக்கக்கூடியது. எனினும் ஒதுக்கீடு செய்துள்ள இந்த நீரின் அளவையாவது உடனடியாக வழங்க வேண்டும்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஆறு வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்காற்று குழுவையும் அமைத்திடுமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஆறு வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்காற்று குழுவையும் அமைத்திடுமாறு மத்திய அரசை வலியுறுத்தி,தஞ்சை மாநகரில் வருகின்ற 25.03.2018 அன்று காலை 08.00 மணிமுதல் மாலை 05.00 மணிவரை மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் pic.twitter.com/MRccq2Ckm3— TTV Dhinakaran (@TTVDhinakaran) March 17, 2018 அதற்காக தஞ்சை மாநகரில் வருகின்ற 25.03.2018 அன்று காலை 08.00 மணிமுதல் மாலை 05.00 மணிவரை மாபெரும் உண்ணாவிரத அறப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

pic.twitter.com/FkgftJDC6n— TTV Dhinakaran (@TTVDhinakaran) March 17, 2018 TTV Dinakaran will do fasting for Cauvery Management Board on 25th.

அடுத்த செய்தி