ஆப்நகரம்

திண்டுக்கல் அருகில் கார் விபத்து: தினகரன் ஆதரவாளர் புகழேந்திக்கு கையில் எலும்பு முறிவு!

திண்டுக்கல் அருகில் ஏற்பட்ட கார் விபத்தில் தினகரனின் ஆதரவாளர் புகழேந்திக்கு இரண்டு கைகளிலும் காயம் ஏற்பட்டுள்ளது.

TNN 7 Dec 2017, 8:13 pm
திண்டுக்கல் அருகில் ஏற்பட்ட கார் விபத்தில் தினகரனின் ஆதரவாளர் புகழேந்திக்கு இரண்டு கைகளிலும் காயம் ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil ttv dinakarans supporter pugazhendi met accident in dindigul
திண்டுக்கல் அருகில் கார் விபத்து: தினகரன் ஆதரவாளர் புகழேந்திக்கு கையில் எலும்பு முறிவு!


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்த போது கர்நாடக மாநில அதிமுக செயலாளராக நியமிக்கப்பட்டவர் புகழேந்தி. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இவர் சசிகலா மற்றும் தினகரனின் தீவிர ஆதரவாளராகிவிட்டார். அவ்வப்பொழுது செய்தியாளர்களை சந்திப்பது, ஆளும் கட்சிக்கு எதிராக குரல் கொடுப்பது, சசிகலா மற்றும் தினகரனுக்கு ஆதரவாக பேசுவது என்று புகழேந்தி பிரபலமாகிவிட்டார்.



இப்படி பிரபலமான நிலையில் தன்னுடைய நண்பர் ஒருவரின் மகன் திருமணத்தில் கலந்து கொள்ள புகழேந்தி பெங்களூருவில் இருந்து திண்டுக்கல் வந்தார். அப்போது, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள மேம்பாலம் அருகில் வந்த போது புகழேந்தியின் கார் கட்டுப்பாட்டை இழந்தது. அதன் பின்னர், மேம்பால தடுப்புச்சுவற்றின் மீது மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், புகழேந்தியின் இரு கைகளிலும் பலத்த காயம் ஏற்பட்டதோடு, எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் திண்டுக்கலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அடுத்த செய்தி