ஆப்நகரம்

டியூசனுக்கு வந்த 30 மாணவிகளிடம் பாலியல் பலாத்காரம்? 3 பேர் கைது

தருமபுரி அருகே டியூசனுக்கு சென்ற 30 மாணவிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து அவர்களிடம் உல்லாசமாக இருந்த குற்றச்சாட்டு தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ஆபாச வீடியோக்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

TOI Contributor 16 Dec 2016, 10:34 am
தருமபுரி அருகே டியூசனுக்கு சென்ற 30 மாணவிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து அவர்களிடம் உல்லாசமாக இருந்த குற்றச்சாட்டு தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ஆபாச வீடியோக்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
Samayam Tamil tuition center owners harassed girl students and arressted by police
டியூசனுக்கு வந்த 30 மாணவிகளிடம் பாலியல் பலாத்காரம்? 3 பேர் கைது



தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோட்டை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 25). அதே பகுதியைச் சேர்ந்த சிலருடன் சேர்ந்து டியூசன் சென்டர் நடத்தி வந்தார். இதில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ–மாணவிகள் டியூசன் படித்து வந்தனர். இவர்கள் தருமபுரியிலும் ஒரு டியூசன் சென்டர் நடத்தி வந்தனர்.


கடந்த 2014ல் சிவக்குமாரிடம் டியூசனுக்கு வந்த ஒரு மாணவியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை அவர் செல்போனில் படம் பிடித்ததாகவும் தெரிகிறது. இந்த செல்போன் காட்சிகள் பின்னர் சிவக்குமாரின் நண்பர் ஈஸ்வரன் மூலம் வெளியானதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவி கடந்த 4–ந்தேதி பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் டியூசனுக்கு வந்த பல மாணவிகளுக்கு இதுபோல் பாலிய தொந்திரவு கொடுத்தது தெரிய வந்துள்ளது. மேலும், வீடியோக்களும் கிடைத்துள்ளது.


மாணவிகளுக்கு டீ மற்றும் காபி போன்றவற்றில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்துள்ளது. வீடியோ எடுத்து மீண்டும் மீண்டும் அவர்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக முக்கிய குற்றவாளியாக சிவக்குமார், ஈஸ்வரன், மற்றொரு சிவக்குமார் ஆகிய 3 பேரிடம் பென்னாகரம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாவாயி மற்றும் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் சம்பவங்கள் தெரிய வரலாம் என்று தெரிகிறது.

அடுத்த செய்தி