ஆப்நகரம்

அனுமதியில்லாமல் போராட்டம் நடத்தினால் சட்ட நடவடிக்கை : தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி!

தூத்துக்குடி: அனுமதியில்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 17 Dec 2018, 3:44 pm
ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை, தேசிய பசுமை தீர்ப்பாயம் ரத்து செய்து மீண்டும் திறக்க அனுமதி வழங்கியது. இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யதுள்ளது.
Samayam Tamil Tuticorin collecter


இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறுகையில், “ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படக்கூடாது என அரசு உறுதியாக உள்ளது. அதனால் யாரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம். அனுமதியில்லாமல் போராட்டம் நடத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தூத்துக்குடி முழுதும் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். ஸ்டெர்லைட் தீர்ப்பு குறித்து, சில வாரத்தில் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்.” என்றார்.

அடுத்த செய்தி