ஆப்நகரம்

ஊரடங்கு சமயத்தில் வெடித்த நாட்டு வெடிகுண்டு... பொதுமக்கள் பீதி

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர் வெடித்தது நாட்டு வெடிகுண்டு தானா அல்லது வேறு ஏதும் மர்ம பொருளா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 25 Mar 2020, 10:45 pm
நாடு முழுக்க ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், தூத்துக்குடி அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்


தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி அருகே உள்ள தளவாய் புரத்தை சேர்ந்தவர் பிரதீப். இவர் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் மாவட்ட செயலாளராக உள்ளார். இவருக்கு சொந்தமான வீடு ஒன்று இந்த ஊரில் ஆளில்லாமல் பூட்டப்பட்டு உள்ளது.

இந்நிலையில் இன்று மாலை திடீரென வீட்டில் குண்டு வெடித்த சத்தம் கேட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் சிப்காட் காவல் நிலையத்திற்கு உடனடியாகத் தகவல் கொடுத்தனர்.

கொரோனா ஊரடங்கு: ப.சிதம்பரத்தின் 10 அம்ச திட்டம்

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர் வெடித்தது நாட்டு வெடிகுண்டு தானா அல்லது வேறு ஏதும் மர்ம பொருளா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


ஒட்டுமொத்த நாடும் ஊரடங்கு உத்தரவுக்கு கட்டுப்பட்டு வீட்டுக்குள் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ள நிலையில், திடீரென குண்டு வெடித்த சத்தம் கேட்டது அந்த கிராமத்தில் பெரும் பீதியை கிளப்பியுள்ளது.

அடுத்த செய்தி