ஆப்நகரம்

காவல்துறை அத்துமீறல்கள் ஏதும் நடந்ததா; ஜூன் 22க்குள் விசாரணை ஆணையத்தில் தெரிவிக்கலாம்!

விசாரணை ஆணையத்தில் காவல்துறை அத்துமீறல் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.

Samayam Tamil 2 Jun 2018, 10:02 am
தூத்துக்குடி: விசாரணை ஆணையத்தில் காவல்துறை அத்துமீறல் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.
Samayam Tamil Aruna Jagadeesan


தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதையடுத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவங்களில், 13 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன. அதிகப்படியான காவல்துறை குவிக்கப்பட்டதே, 13 பேர் உயிரிழப்பிற்கு காரணம் என்று ஐநா மனித உரிமை ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் பொதுமக்கள், காவல்துறையினர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்தும், போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்கள் ஏதும் நடந்ததா என்பது குறித்தும் விசாரணை ஆணையத்தில் ஜூன் 22க்குள் பொதுமக்கள் நேரிலோ, தபாலிலோ விசாரணை ஆணையத்தில் தகவல் தெரிவிக்கலாம் என்று அருணா ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.

Tuticorin Inquiry commission asked to report police atrocity before June 22nd.

அடுத்த செய்தி