ஆப்நகரம்

ஸ்டெர்லைட் ஆலையில் கசிந்த ஆசிட்டில் இதுவரை 500 டன் அகற்றம்!

ஸ்டெர்லைட் ஆலையில் கசிவடைந்த கந்தக அமிலத்தில் இதுவரை 25 லாரிகள் மூலம் 500 டன் அகற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 21 Jun 2018, 2:45 pm
ஸ்டெர்லைட் ஆலையில் கசிவடைந்த கந்தக அமிலத்தில் இதுவரை 25 லாரிகள் மூலம் 500 டன் அகற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil sterlite copper


ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய தூத்துக்குடி மக்கள் மீது காவல் துறையினா் துப்பாக்கிச்சூடு நடத்தினா். இந்த விபத்தில் 13 போ் கொலை செய்யப்பட்டதைத் தொடா்ந்து ஸ்டொ்லைட் ஆலையை மூடுவதாக முதல்வா் பழனிசாமி சட்டமன்றத்தில் ஆணை பிறப்பித்தாா்.

இந்நிலையில் ஸ்டொ்லைட் ஆலையில் இருந்து ரசாயனக் கசிவு வெளியேறுவதாக கடந்த வாரம் தகவல்கள் பரவத் தொடங்கின. இதனைத் தொடா்ந்து மாவட்ட அம்மாவட்ட ஆட்சித் தலைவா் சந்தீப் நந்தூரி கூறுகையில், ஸ்டொ்லைட் ஆலையால் தற்போது எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ரசாயனக் கழிவு என்ற தகவல் குறித்து தொழிலாளர் நலத்துறை, வருவாய்த்துறை, மாசுகட்டுப்பட்டு வாரியம் மற்றும் காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய குழு ஆய்வு செய்கிறது. மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். ரசாயனக் கசிவு குறித்து மேலும் வதந்திகள் பரவக் கூடாது என்பதற்காக ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.

ஆனால், ஸ்டெர்லைட் ஆலைக்கு சென்று ஆய்வு செய்த போது 50,000 லிட்டர் கந்தக அமிலம் (சல்ப்யூரிக் ஆசிட்) கசிந்து கொண்டிருந்தது. இதையடுத்து, தீயணைப்புதுறையினர், ஆலையின் தொழிலாளர்களின் உதவியோடு கந்தக அமிலத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இன்று மதியம் நிலவரப்படி சுமார் 25 லாரிகள் மூலமாக 500 டன் கந்தக அமிலம் அகற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து மீதம் உள்ள அமிலத்தையும் அகற்றும் பணியில் அதிகாரிகள் முழுமுயற்சியில் உள்ளனர். இன்னும் இரண்டு நாளில் அமிலம் முழுவதும் அப்புறப்படுத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி