ஆப்நகரம்

டிவிஎஸ் குழுமத் தலைவா் சீனிவாசனுக்கு முன்ஜாமீன்

டிவிஎஸ் குழுமத் தலைவா் வேணு சீனிவாசனுக்கு சென்னை உயா்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

Samayam Tamil 29 Nov 2018, 12:58 am
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள மயில் சிலை மாற்றப்பட்டது தொடா்பான வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் வேணு சீனிவாசனுக்கு முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
Samayam Tamil Venu Srinivasan


தமிழகத்தில் உள்ள பழமையான கோவில்களை புனரமைக்கும் பணிகளை, டிவிஎஸ் குழுமம் நீண்ட காலமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2004ஆம் ஆண்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் புனரமைப்பின் போது, முறைகேடு நடந்ததாகவும், மயில் சிலையில் இருந்த பூவுக்கு பதிலாக பாம்பு அமைக்கப்பட்டள்ளது. கோவில் ஆகம விதிகளுக்கு எதிராக சிலையை அமைத்ததால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாா் அளிக்கப்பட்டது.

இந்த வழக்கில் முன்ஜாமின் வழங்கக் கோரி இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள், கோவில் அறங்காவலரும், டிவிஎஸ் குழுமத் தலைவருமான வேணுசீனிவாசன், ஸ்தபதி முத்தையா ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர்.

இதில் திருமகளுக்கு முன் ஜாமின் வழங்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. அவருக்கு எதிராக அர்ச்சகரும், இரு அதிகாரிகளும் வாக்குமூலம் அளித்துள்ளதை சுட்டிக்காட்டி முன்ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டது. அதேநேரம் வேணுசீனிவாசன், ஸ்தபதி முத்தையா ஆகியோருக்கு முன்ஜாமின் வழங்கி நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. இதை எதிர்த்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் மனு செய்யலாம் என்றம் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.

அடுத்த செய்தி