ஆப்நகரம்

தமிழகத்தில் கொரோனா: சென்னை கொடுத்துவரும் அதிர்ச்சி... 12 பேர் பலி...

தமிழகத்தில் வழக்கம் போல இன்றும் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.

Samayam Tamil 4 Jun 2020, 6:52 pm
தமிழகத்தில் கொரோனா பாதிப்பை நிலவரத்தை குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று மேலும் 1384 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் மகாராஷ்டிரா உள்ளிட்ட வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 11 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil தமிழகத்தில் கொரோனா


இன்று மேலும் 585 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் மொத்தம் 14,901 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகபட்சமாக 12 பேர் பலியாகியுள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 220 ஆக அதிகரித்துள்ளது.


இன்றும் அதிகபட்சமாக சென்னையில் 1072 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18,693 ஆக உயர்ந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக செங்கல்பட்டில் இன்று 169 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 1537 ஆக உயர்ந்துள்ளது.

பென்ஸ், ஆடி, ஜாகுவார் நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய முதல்வர் அழைப்பு..!

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா சிகிச்சையிலும், தனிமைப்படுத்தப்படும் 12,132 உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி