ஆப்நகரம்

நெல்லையில் 20 பேர் டிஸ்சார்ஜ்..! கைதட்டி அனுப்பி வைத்த மருத்துவர்கள்...

நெல்லை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 20 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

Samayam Tamil 23 Apr 2020, 5:19 pm
தமிழகத்தில் கொரோனா ஆரம்ப கட்டத்தில் எத்தகைய தீவிரத்தை காட்டி வந்ததோ அந்த தீவிரம் தற்போது மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. ஒரு சில நாட்கள் அதிக தொற்றுகள் உறுதி செய்யப்பட்டாலும், பெரும்பாலும் எண்ணிக்கை 50க்கும் குறைவாகவே உள்ளது.
Samayam Tamil திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை


நேற்று எடுக்கப்பட்ட பரிசோதனையில் வெறும் 33 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டது. தற்போது வரை தமிழகத்தில் 662 பேர் குணமடைந்துள்ளனர். இன்று திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 20 பேர் குணமாகியுள்ளனர்.

தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு அனுமதி; வேறு எந்தெந்த பணிகள் இயங்கலாம்?

அவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவரும் அவர்களை கைதட்டி உற்சாக படுத்தி அனுப்பி வைத்தனர். குணமாகி வீட்டுக்கு புறப்பட்ட அவர்களும் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் நன்றி தெரிவித்து விடை பெற்றனர். நெல்லை மாவட்டத்தில் நேற்று வரை 62 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி