ஆப்நகரம்

பிணத்தை கட்டிப்பிடித்து உருண்டு 20 சவரன் நகையை ஆட்டைய போட்ட கில்லாடி பெண்!

வேலூர் மாவட்டத்தில் பிணத்தைக் கட்டிப்பிடித்து உருண்டு 20 சவரன் நகையை ஆட்டையப் போட்ட கில்லாடிப் பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 8 Jul 2018, 6:08 pm
வேலூர் மாவட்டத்தில் பிணத்தைக் கட்டிப்பிடித்து உருண்டு 20 சவரன் நகையை ஆட்டையப் போட்ட கில்லாடிப் பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil dead body


வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்தவர் பிரபு. இவரது தாய் வசந்தி (47). திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதையடுத்து, இறுதிச் சடங்குகள் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. வெள்ளிக்கிழமை என்பதால், அவரது கழுத்தில் இருந்த தாலிச்சரடு, செயின் போன்றவற்றை இப்போது எடுக்க வேண்டாம், சுடுகாட்டுக்கு சென்ற பிறகு அங்கு வைத்து, அவைகளை எடுத்துக் கொள்ளலாம் என்று உறவினர்கள் கூறி முடிவெடுத்துள்ளனர்.

இந்த நிலையில், வசந்தியின் உடலை சிலர் கட்டிப்பிடித்து உருண்டு பிரண்டு அழுதுக்கொண்டிருந்தனர். இதையடுத்து, சுடுகாட்டுக்கு சென்ற பிறகு, அங்கு வைத்து உடலில் இருந்த நகைகளை கழன்ற முயன்ற போது, அப்படியே அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏனென்றால், அவர் அணிந்திருந்த கம்மல், மூக்குத்தி மட்டும் அப்படியே இருந்துள்ளது. சுமார் 20 சவரன் நகைகளை காணவில்லை. இதன் பிறகு உடலை எரித்துவிட்டு, திருப்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அடுத்த செய்தி