ஆப்நகரம்

திருச்சியில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இருவர் கைது!

திருச்சியில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 9 Dec 2018, 10:49 am
திருச்சியில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil WhatsApp Image 2018-12-09 at 07.55.26.


திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் கொள்ளிடக் கரையில் உள்ள பக்தர்கள் தங்கும் விடுதி. இந்த விடுதிக்கு எதிரே சிறுமியை 4 இளைஞர்கள் கூட்டாக சேர்ந்த பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இது குறித்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகாரின் பேரில், ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த 4 பேரிடம் போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையைத் தொடர்ந்து, ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த மகேஸ்வரன், பாலகிருஷ்ணன் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். இதற்கிடையில், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அடுத்த செய்தி