ஆப்நகரம்

திருவண்ணாமலையில் முகமூடி அணிந்து வந்து ரூ.2.65 லட்சம் கொள்ளை

திருவண்ணாமலையில் இரு பைக் கொள்ளையர்கள் 31 வயது நிரம்பிய ஒருவரை வழிமறித்து அவரிடமிருந்து ரூ.2.65 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

TNN 25 Aug 2016, 10:53 pm
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் சுதர் (31) என்பவர் மொத்த விலை வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் கடையை மூடிவிட்டு ரூ.2.65 லட்சம் பணத்துடன் அவரது பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.
Samayam Tamil two bike borne robbers intercepted a 31 year old man and robbed him of rs 2 65 lakh at chetpet in tiruvannamalai district on wednesday night
திருவண்ணாமலையில் முகமூடி அணிந்து வந்து ரூ.2.65 லட்சம் கொள்ளை


அவரை கண்காணித்து வந்த முகமூடி அணிந்து வந்த இருவர் பைக்கில் அவரை பின் தொடர்ந்து சென்றனர். பின்னர் ஒரு இடத்தில் அவரை முந்தி சென்று பத்மாவதி ஸ்ரீனிவாச தியேட்டர் அருகே அவருக்கு எதிராக வந்து அவரது பைக்கில் மோதினர். இதில் நிலை தடுமாறி சுதர் கீழே விழுந்தார். அப்போது அவரிடமிருந்த பணப்பையை எடுத்துக்கொண்டு அந்த கொள்ளையர் இருவரும் பைக்கில் தப்பி சென்றுவிட்டனர்.

இது தொடர்பாக சுதர் சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். தொடர்ந்து இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதே போல் கடந்த வாரம் திருவண்ணாமலை மாவட்டத்தில் 58 வயது நிரம்பிய பிஸினஸ்மேனிடமிருந்து ரூ.5 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி