ஆப்நகரம்

ஒரு மணமகனுக்கு இரண்டு மணமகள்கள்: பரபரப்பை ஏற்படுத்திய திருமண அழைப்பிதழ்!

ஒரு மணமகனுக்கு இரண்டு மணமகள்கள் கொண்ட திருமண அழைப்பிதழ் சமூகவலைதளத்தில் வைரலானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

TNN 2 Sep 2017, 3:24 pm
ஒரு மணமகனுக்கு இரண்டு மணமகள்கள் கொண்ட திருமண அழைப்பிதழ் சமூகவலைதளத்தில் வைரலானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil two brides for a groom marriage invitation goes viral in social media
ஒரு மணமகனுக்கு இரண்டு மணமகள்கள்: பரபரப்பை ஏற்படுத்திய திருமண அழைப்பிதழ்!


விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள வெள்ளையாபுரத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. சிறு வயதிலேயே தன்னுடைய பெற்றோரை இழந்த இவர். சகோதரிகளால் வளர்க்கப்பட்டார். இந்நிலையில், கூலி செய்து வந்த இவருக்கு திருமணம் செய்து வைக்க சகோதரிகள் இருவரும் முடிவு செய்துள்ளனர். இதன் காரணமாக, ஒரு சகோதரியின் மகளை திருமணம் செய்யும் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தது. ஆனால், மற்றொரு சகோதரியின் மகள் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாதவர் என்பதால் அவரையும், ராமமூர்த்திக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, மணமகனுக்கு இரண்டு மணப்பெண்கள் பெயர் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் உறவினர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், இந்த திருமண அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியுள்ளது. இதன் காரணமாக, இந்த திருமண அழைப்பிதழ் பற்றி மாவட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மணமகனின் சகோதரிகளிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, தவறுதலாக இரு மணப்பெண்களின் பெயர் அச்சிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அடுத்த செய்தி