ஆப்நகரம்

தஞ்சாவூர், அரவக்குறிச்சி: தேர்தல் தேதியில் மீண்டும் மாற்றம்

தஞ்சாவூர், அரவக்குறிச்சியில் ஆகிய இரண்டு தொகுதிகளில் நடைபெறவிருந்த தேர்தல் வேறு தேதியில் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

TNN 28 May 2016, 1:46 pm
சென்னை: தஞ்சாவூர், அரவக்குறிச்சியில் ஆகிய இரண்டு தொகுதிகளில் நடைபெறவிருந்த தேர்தல் வேறு தேதியில் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Samayam Tamil two constituencies election may held before announced date
தஞ்சாவூர், அரவக்குறிச்சி: தேர்தல் தேதியில் மீண்டும் மாற்றம்


நடைபெற்று முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில், தஞ்சாவூர், அரவக்குறிச்சியில் ஆகிய இரண்டு தொகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெறவில்லை. பெரிய அளவில் பணப்பட்டுவாடா நடைபெற்றதையடுத்து அந்த தொகுதிகளில் மட்டும் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

அதனையடுத்து, அந்த இரண்டு தொகுதிகளுக்கு வருகிற ஜூன் மாதம் 13-ம் தேதியன்று தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால், ரம்ஜான் நோன்பு நெருங்குவதால், தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

இதற்காக சென்னை உயர் நீதிமன்றம் சென்ற திமுக-வின் மனுவை விசாரித்த நீதிமன்றம், வேட்பாளர்களிடம் கலந்து பேசி மே 27-ம் தேதிக்குள் (நேற்று) தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் முடிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தியது.

இதனிடையே, தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என தமிழக ஆளுநர் ரோசையா கோரிக்கை விடுத்தார்.

ஆளுநரின் கோரிக்கையை தொடர்ந்து, தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சியில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்னதாகவே தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், ஜூன் 13-ம் தேதி நடைபெறவிருந்த தேர்தல் குறித்த அறிவிப்பை ரத்து செய்தும், விரைவில் வேறு தேதி அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

திருப்பரங்குன்றம் அதிமுக எம்எல்ஏ சீனிவேல் காலமானதால், அந்த தொகுதிக்கும் சேர்த்து தேர்தல் நடத்த வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி