ஆப்நகரம்

ராஜாஜி அரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் பலி, 30 பேர் படுகாயம்!

திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ராஜாஜி அரங்கில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தில், 2 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

Samayam Tamil 8 Aug 2018, 3:27 pm
திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ராஜாஜி அரங்கில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தில், 2 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
Samayam Tamil rajaji


முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பிரதமா் மோடி, தமிழக முதல்வா் பழனிசாமி, மேற்கு வங்க முதல்வா் மமதா பேனா்ஜி, கா்நாடகா முதல்வா் குமாரசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும், சினிமா பிரபலங்களும், முக்கிய தலைவா்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனா்.

பெரும் சட்டப் போராட்டத்திற்கு பின்னா் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய சென்னை மெரினா கடற்கரையில் இடம் பெறப்பட்டுள்ளது. இதனிடையே கருணாநிதியின் இறுதி ஊா்வலம் மாலை 4 மணிக்கு தொடங்கும் என்று கட்சி சாா்பில் தொிவிக்கப்பட்டுள்ளது.
ராஜாஜி அரங்கில் இருந்து சிவானந்தா சாலை, தந்தை பெரியாா் சிலை, அண்ணா சிலை, வாலாஜா சாலை வழியாக அண்ணா சதுக்கத்தை சென்றடையும் இறுதி ஊா்வலத்தில் கழக உடன் பிறப்புகள் திரலானோா் அமைதியான வகையில் கலந்து கொள்ளுமாறு கட்சி சாா்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது
இந்நிலையில், ராஜாஜி அரங்கில் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்த இரண்டு பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 2 பெண் போலீசார் உட்பட 30 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அடுத்த செய்தி