ஆப்நகரம்

அரசு பேருந்து மோதி ட்ரை சைக்கிளில் சென்ற நண்பர்கள் பலி..!

மூன்று சக்கர சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த இரண்டு இளநீர் வியாபாரிகள் மீது அரசு பேருந்து மோதியதில், சம்பவ இடத்திலேயே அவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 31 Jan 2019, 4:46 pm
மூன்று சக்கர சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த இரண்டு இளநீர் வியாபாரிகள் மீது அரசு பேருந்து மோதியதில், சம்பவ இடத்திலேயே அவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil அரசு பேருந்து மோதியதில் இளநீர் வியாபாரிகள் பலி


மானாமதுரையில் இளநீர் வியாபாரம் செய்து வரும் ராஜகம்பீரம் (51) மற்றும் சாமியாதுரை (51) இருவரும் மூன்று சக்கர மிதிவண்டி வாங்குவதற்காக மதுரைக்கு சென்றிருந்தனர். வாகனத்தை வாங்கிவிட்டு மானாமதுரைக்கு சாலை வழியாக திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது மதுரையிலிருந்து ராமநாதபுரம் நோக்கிச் செல்லும் அரசுப் பேருந்து வேகமாக வந்து அவர்கள் பின்னே மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்து தொடர்பாக மானாமதுரை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அரசு பேருந்து ஓட்டுநர் ஆனந்தன் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அடுத்த செய்தி