ஆப்நகரம்

மாணவியை வீடியோ எடுத்து மிரட்டிய இரண்டு பொறியியல் மாணவர்கள் கைது

சென்னையில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இரண்டு கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 15 Apr 2019, 6:23 pm
பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரத்தில்
Samayam Tamil மாணவிக்கு பாலியல் தொந்தரவு- கல்லூர் மாணவர்கள் போக்சோ சட்டத்தில் கைது
மாணவிக்கு பாலியல் தொந்தரவு- கல்லூர் மாணவர்கள் போக்சோ சட்டத்தில் கைது

இரண்டு பொறியியல் கல்லூரி மாணவர்கள் போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து தமிழகம் இன்னும் மீளாத நிலையில், அதேபோன்ற ஒரு சம்பவம் சென்னையில் நடந்துள்ளது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த பள்ளி, நண்பரின் அழைப்பை ஏற்று பள்ளிக்கரணையில் உள்ள வீட்டுக்கு சென்றுள்ளார். வீட்டில் பெற்றோர்கள் இல்லாததை நண்பர் கூறியுள்ளார். அப்போது அவர்கள் இருவரும் தனித்து இருந்துள்ளார்.

இதில் திடீர் திருப்பமாக நண்பரின் வீட்டில் இருந்த மற்றொரு கல்லூரித் தோழன், அவர்கள் தனிமையில் இருந்ததை பெண்ணுக்கு தெரியாமல் படம் பிடித்துள்ளார். இது மாணவிக்கு தெரிந்த போது மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மேலும், மாணவியுடன் தனிமையில் இருந்த நண்பர் பெண்ணை தோழனுடன் தனிமையில் இருக்க வற்புறுத்தியுள்ளார். அப்போது பெண் மறுக்க, உடனே வீடியோவை காட்டி மிரட்டியுள்ளார். எனினும், மாணவி உடன்படவே இல்லை.

வீட்டுக்குச் சென்றுவிட்ட மாணவி, நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறியுள்ளார். உடனே அவர்கள் இந்த விவகாரம் தொடர்பாக போலீசில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக, நடவடிக்கை எடுத்த காவல்துறை மாணவியை மிரட்டிய இரண்டு கல்லூரி மாணவர்களை கைது செய்தனர்.

தவிர, மாணவிக்கு 17 வயது தான் ஆகிறது என்பதால், அவர் தொடர்பான எந்த விவரங்களையும் காவல்துறை வெளியிடவில்லை. மேலும், குற்றம்சாட்டப்பட்ட கல்லூரி மாணவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி