ஆப்நகரம்

பஞ்சாப் " டூ" நடுக்காட்டுப்பட்டி.... சுஜித்தை மீட்க களமிறங்கும் விவசாயிகள் !!

ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள சிறுவன் சுஜித்தை மீட்கும் பணியில் ஈடுபடுவதற்காக, பஞ்சாப்பில் இருந்து இரண்டு அனுபவம்மிக்க விவசாயிகள் இன்று நள்ளிரவு நடுக்காட்டுப்பட்டிக்கு விரைய உள்ளனர்.

Samayam Tamil 28 Oct 2019, 11:25 pm
திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நான்காவது நாளாக தொடர்ந்து 77 மணி நேரத்திற்கும் மேலாக இந்த மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
Samayam Tamil pf


இந்தப் பணிகள் நடைபெற்று வரும் இடத்தில் பூமிக்குள் பாறைகள் இருப்பதால், குழந்தை சுஜித் சிக்கியுள்ள ஆழ்துளை கிணற்றுக்கு பக்கவாட்டில் 100 அடி வரை குழித் தோண்டும் பணி பெரும் சவாலாக இருந்து வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் தொடங்கிய இப்பணி 40 மணி நேரத்தை கடந்து இன்னமும் தொடர்ந்து கொண்டுள்ளது. இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை இப்பணி நிறைவடையும் எனத் தெரிகிறது.

இந்த நிலையில், சிறுவன் சுஜித்தை மீட்கும் பணியில் தீயணைப்புப் படையினர், பேரிடர் மீட்பு குழுவினருடன் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அனுபவமிக்க இரண்டு விவசாயிகளும் களமிறங்க உள்ளனர்.

குர்விந்தர் சிங், ஹர்விந்தர சிங் என்ற இரு விவசாயிகளும், இப்பணியில் ஈடுபடுவதற்காக அவர்கள், இன்றிரவு 12 மணியளவில் திருச்சி விமான நிலையம் வந்தடைகின்றனர்.

அங்கிருந்து அவர்கள் நடுக்காட்டுப்பட்டி கிராமத்துக்கு விரைகின்றனர். எம்எல்ஏ தமிமுன் அன்சாரியின் ஏற்பாட்டின் பெயரில் விவசாயிகள் இருவரும் திருச்சி வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த செய்தி