ஆப்நகரம்

சசிகலாவை பார்க்க துடிக்கும் இரு முன்னாள் அமைச்சர்கள்

சசிகலாவை விடுதலைக்கு முன்னர் சந்திக்க பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Samayam Tamil 20 Jan 2021, 4:37 pm
சசிகலாவை முன்கூட்டியே விடுவிக்க கோரி அவரது வழக்கறிஞர்கள் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு விடுதலை தள்ளிப் போனது. ஜனவரி 27ஆம் தேதிதான் விடுதலை செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது என சிறைத்துறை நிர்வாகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதிலளித்த நிலையில் அந்த நாளே உறுதியாகியுள்ளது.
Samayam Tamil sasikala


ஜனவரி 27ஆம் தேதி பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா விடுதலையாவது உறுதி என்றும், அதற்கான அலுவல் ரீதியான கடிதம் கிடைத்துவிட்டதாகவும் அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

மேலும், பிப்ரவரி 5ஆம் தேதி இளவரசி விடுதலையாவது உறுதியாகியுள்ளது என்று தெரிவித்துள்ள அவர், சுதாகரன் விடுதலை குறித்த எந்த விவரத்தையும் சிறைத்துறை நிர்வாகம் வழங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

கருத்துக் கணிப்பு முடிவு: ஸ்டாலின், மம்தா, பினராயி வெற்றி வாய்ப்பு எப்படி?

சசிகலா விடுதலையாக ஏழு நாள்களே உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் சூடாகியுள்ளது. இந்நிலையில் சசிகலாவை விடுதலைக்கு முன்னர் சந்திக்க அவரது குடும்பத்தினர், உறவினர்கள், வழக்கறிஞர்கள் என முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் விருப்பம் தெரிவித்து மனு அளித்துள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இந்த பட்டியலில் இரு முன்னாள் அமைச்சர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுகவில் சசிகலா, தினகரன் இணைய 100 சதவீதம் வாய்ப்பே இல்லை என எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்திக்கும்போது கூறினார்.

சசிகலாவுக்கு திடீர் மூச்சுதிணறல்: சிறைக்கு விரைந்த மருத்துவக் குழு!

சசிகலா அதிமுகவிலேயே இல்லை என எடப்பாடி பழனிசாமி கூறிவந்தாலும் அவர் உள்ளிட்ட பல அமைச்சர்கள் சசிகலா கை காட்டியே அந்தப் பதவிகளை அடைந்தனர் என சசிகலா ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர். விடுதலையான பின்னர் யார் யாரெல்லாம் சசிகலா பக்கம் செல்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அரசியல் நகர்வுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி