ஆப்நகரம்

டாஸ்மாக் அருகே பிணமாக கிடந்த நண்பர்கள்!

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே இருவர் மர்மமான முறையில் இறந்துகிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TOI Contributor 9 Jul 2017, 9:03 pm
மதுரை: திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே இருவர் மர்மமான முறையில் இறந்துகிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil two friends found dead near liquor shop in tamil nadu
டாஸ்மாக் அருகே பிணமாக கிடந்த நண்பர்கள்!


திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை புதூர் பகுதியைச்சேர்ந்தவர்கள் மரியதாஸ் (27 வயது), குமார் (25). இவர்கள் இருவரும், வெளியில் சென்று வீடு திரும்புவதாக கூறிவிட்டு சென்றனர். ஆனால் இரவு முழுதும் இவர்கள் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து அவர்கள் குடும்பத்தார் அவர்களை தேடத்துவங்கினர். அதேநேரத்தில், சிறுமலையில் உள்ள டாஸ்மாக் அருகே இருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற போலீசார் விசாரித்ததில் அவர்கள் மரியதாஸ், குமார் ஆகியோர் என தெரியவந்தது. அவர்கள் உடலில் வெட்டு காயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, போலீச்சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

MADURAI: Two men were found dead near a Tasmac liquor shop in the foothills of Sirumalai in Dindigul district of Tamil Nadu on Sunday morning.

அடுத்த செய்தி