ஆப்நகரம்

கனமழை எதிரொலி: மதுரைக்கு வரவேண்டிய இரண்டு இண்டிகோ விமானங்கள் ரத்து...

தமிழகத்தில் கனமழை எதிரொலியாக மதுரைக்கு வரவேண்டிய இரண்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 2 Dec 2019, 8:15 am
தமிழ்நாடு முழுக்க மழையின் தீவிரத்தால் ஏறக்குறைய 9 மாவட்டங்கள் , மற்றும் இரண்டு மாவட்டங்களின் சில தாலுக்காக்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு உள்ளது.
Samayam Tamil indigo1



கடும் மழையால் சாலைகளில் நீர் தேங்கியும், குண்டும் குழியுமாகவும் இருப்பதால் தரைவழிப் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வான்வழிப்போக்குவரத்தும் பாதிப்படைந்துள்ளது.



மழை காரணமாக, மதுரை விமான நிலையத்துக்கு வர வேண்டிய, 2 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யபட்டுள்ளன. பெங்களூரு மற்றும் ஐதராபாத் நகரங்களில் இருந்து மதுரை வர வேண்டிய விமானங்கள் திடீரென்று ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் தவித்தனர்.

அடுத்த செய்தி