ஆப்நகரம்

மதுரை பள்ளிகளில் வெடிகுண்டு மிரட்டல்!

மதுரையில் உள்ள இரண்டு பள்ளிகளில் இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, மதுரையில் பதற்றம் நிலவியது.

TNN 10 Nov 2017, 7:08 pm
மதுரை: மதுரையில் உள்ள இரண்டு பள்ளிகளில் இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, மதுரையில் பதற்றம் நிலவியது.
Samayam Tamil two madurai schools receive hoax bomb calls
மதுரை பள்ளிகளில் வெடிகுண்டு மிரட்டல்!


மதுரையில் உள்ள ஸ்ரீ சாரதா வித்யாவனம் உயர்நிலைப் பள்ளியில் இன்று பள்ளி தொடங்குவதற்கு முன்பாக, போனில் பெண் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார்.

இதனையடுத்து, போலீஸார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அந்த இடத்தை ஆய்வு செய்தனர். அப்போது, கேவிடி மெட்ரிக்குலேஷன் உயர்நிலைப் பள்ளியில் மற்றொரு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

இரண்டு பள்ளிகளையும் ஆய்வு செய்த வெடிகுண்டு நிபுணர்கள், இறுதியில் மிரட்டல்கள் இரண்டும் வதந்திகள் என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மிரட்டல் விடுத்தவர் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி