ஆப்நகரம்

கன மழையால் அறுந்து விழுந்த மின் கம்பியால் இருவர் பலி

பைக்கில் கால்வேஹல்லியில் இருந்து காவேரிப்பட்டினம் சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பியுள்ளனர். வரும் வழியில் கத்தேரி பிரிவு ரோடு அருகே கனமழையால் அறுந்து கிடந்த மின்சார கம்பி மீது பைக்கை ஏற்றியுள்ளனர்.

Samayam Tamil 23 Apr 2019, 5:24 pm
கன மழையால் அறுந்து விழுந்த மின் கம்பியால் இருவர் பலி
Samayam Tamil rain

கிருஷ்ணகிரியில் கன மழையால் அறுந்து விழுந்த மின் கம்பி மீது பைக்கை ஏற்றியதால் அதில் சென்ற இருவர் உயிரிழந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்த கால்வேஹல்லி பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி. நிப்பட் தயாரிக்கும் கடை நடத்திவருகிறார். இவரிடம் சரவணன் என்பவர் பணியாற்றி வருந்துள்ளார்.

திங்கட்கிழமை இரவு கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் இடி மின்னலுடன் கூடிய பரவலாக கனமழை பெய்தபோது இருவரும் பைக்கில் கால்வேஹல்லியில் இருந்து காவேரிப்பட்டினம் சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பியுள்ளனர். வரும் வழியில் கத்தேரி பிரிவு ரோடு அருகே கனமழையால் அறுந்து கிடந்த மின்சார கம்பி மீது பைக்கை ஏற்றியுள்ளனர்.

இதனால் பைக்கில் சென்ற இருவரும் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். உடனடியாக அப்பகுதி மக்கள் ஆம்புலென்ஸ்க்கு தகவல் அளித்து, கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இது குறித்து காவேரிப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

அடுத்த செய்தி