சமீப காலமாக பன்றிக் காய்ச்சல், டெங்கு நோய் அனைத்துப் பகுதிகளிலும் தீவிரமாக பரவி வருகிறது. இதுவரையில் நூற்றுக்கணக்கான மக்கள் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம், தமிழகத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன், 4 பேர் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டனர்.
இதே போல டெங்கு காய்ச்சலும் தமிழகத்தில் வேகமாக பரவிவருகிறது. இந்நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் காய்ச்சலால் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில வாரத்தில் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் சுந்தர்ராஜன்பட்டியை சேர்ந்த மந்திரமூர்த்தி, 45, பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் கடந்த சில நாட்களுக்கு முன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதேபோல மேலூரைச் சேர்ந்த அல்லிமலர், 35 என்பவரும், பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் கடந்த சில நாட்களுக்கு முன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரும் இன்று காலை உயிரிழந்தார். இதையடுத்து கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மதுரையில் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் மேலும் 3 பேர் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதே போல 2 பேர் டெங்கு காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், குழந்தைகள் பிரிவு உட்பட மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மொத்தமாக 102 பேர், சிகிச்சை பெற்று வருவதாக, டீன் மருதுபாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதே போல டெங்கு காய்ச்சலும் தமிழகத்தில் வேகமாக பரவிவருகிறது. இந்நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் காய்ச்சலால் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில வாரத்தில் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் சுந்தர்ராஜன்பட்டியை சேர்ந்த மந்திரமூர்த்தி, 45, பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் கடந்த சில நாட்களுக்கு முன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதேபோல மேலூரைச் சேர்ந்த அல்லிமலர், 35 என்பவரும், பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் கடந்த சில நாட்களுக்கு முன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரும் இன்று காலை உயிரிழந்தார். இதையடுத்து கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மதுரையில் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.