ஆப்நகரம்

புதுக்கோட்டையில் மின் கம்பி மிதித்து இருவர் பலி!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அரையபட்டி கிராமத்தில் வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் இருவர் பலியாயினர். இவர்களது இறப்புக்கு தமிழக அரசு முழு பொறுப்பு ஏற்று, ரூ 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் கிராமத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Samayam Tamil 10 Dec 2018, 5:25 pm
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அரையபட்டி கிராமத்தில் வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் இருவர் பலியாயினர்.

ஆலங்குடி அருகே அரையபட்டி கிராமத்தில் கஜா புயலால் பாதித்து 24 நாட்கள் ஆகிய நிலையில் மின் கம்பிகள் இன்னும் சரி செய்யபடவில்லை. கிராமத்தின் ஒரு பகுதிக்கு மின் இணைப்பு கொடுத்தும், ஒரு பகுதிக்கு மின் இணைப்பு கொடுக்காத நிலையிலும் அறுந்து கிடந்த மின் கம்பியில் எப்படி மின்சாரம் வந்தது என்று அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த சுசிலா (45) சக்திவேல் (25) ஆகிய இருவரும் வயல் பகுதியில் தண்ணீர் எடுப்பதற்கு சென்றபோது வரப்பின் ஒரு பகுதியில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாயினர். அப்பகுதியில் மின் இணைப்புகள் இன்னும் சரி செய்யப்படவில்லை. இதற்கு மின்வாரிய ஊழியர்களின் அலட்சியமே காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் இவர்களது இறப்புக்கு தமிழக அரசு தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கிராமத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

அடுத்த செய்தி