ஆப்நகரம்

சுவாதி கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் இருவரிடம் விசாரணை

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், சென்னை காவல்துறையினர் இருவரை கைது செய்து விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

TNN 29 Jun 2016, 1:21 pm
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், சென்னை காவல்துறையினர் இருவரை கைது செய்து விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Samayam Tamil two persons in police custody in the swathi murder case
சுவாதி கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் இருவரிடம் விசாரணை


சென்னை உயர்நீதிமன்றத்தின் அழுத்தத்தால், இந்த வழக்கை ரயில்வே காவல்துறையினரிடமிருந்து சென்னை காவல்துறைக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ளது.


சுவாதியுடன் செல்போனிலும், சமூக வளைதளங்கள் மூலமாகவும் அதிகமாக பேசியுள்ள இரண்டு நபர்களை கைது செய்து விசாரணை செய்து வருவதாகவும்,இன்னும் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் குற்றவாளியை கைது செய்துவிடுவோம் எனவும் சென்னை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் சுவாதியின் செல்போன் தற்போது வரை கிடைக்கவில்லை.அந்த செல்போன் கிடைத்தால் இந்த வழக்கில் மிகப்பெரிய உதவியாக இருக்கும் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.சுவாதியின் தோழிகள் மூலம் கிடைத்துள்ள தகவல்கள் வழக்கு விசாரணை முன்னேற்றம் அடையச் செய்யும் வகையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி