ஆப்நகரம்

போலீசாரையும் விட்டு வைக்காத டெங்கு காய்ச்சல் !!

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவலாக பரவிவரும் நிலையில் , அது காவல்துறையினரை மட்டும் விட்டுவைக்குமா என்ன . சென்னையில் பணியாற்றும் இரண்டு காவல்துறையினரை டெங்கு பாதித்துள்ளது.

TNN 29 Jul 2017, 4:41 pm
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவலாக பரவிவரும் நிலையில் , அது காவல்துறையினரை மட்டும் விட்டுவைக்குமா என்ன . சென்னையில் பணியாற்றும் இரண்டு காவல்துறையினரை டெங்கு பாதித்துள்ளது.
Samayam Tamil two police men were affected by dengue fever
போலீசாரையும் விட்டு வைக்காத டெங்கு காய்ச்சல் !!


சென்னையில் டெங்கு காய்ச்சல் அறிகுறி பல இடங்களில் பரவிவருகிறது. இந்த காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே சென்னையில் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகளுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கமி‌ஷனர் அலுவலகத்தில் மத்திய குற்றப்பிரிவில் பணிபுரியும் திபு என்ற காவல்துறை அதிகாரியும் , ஆயுதப்படை காவல்துறை அதிகாரி பார்த்திபன் ஆகியோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டபோது இருவருக்கும் டெங்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டுள்ளது. தற்போது இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

two police men were affected by dengue fever

அடுத்த செய்தி