ஆப்நகரம்

நாகையில் ஒரே பள்ளியைச் சேர்ந்த இரண்டு பள்ளி மாணவர்கள் மரணம்!

நாகை, கீழ்வேளூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஹரிகிருஷ்ணனின், மகன்ஆகாஷ் நாகையில் உள்ள CSI மேனிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் நண்பரை சந்தித்து விட்டு வீடு திரும்பிய போது, ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது, ரயில் மோதி உயிரிந்தார்.

Samayam Tamil 17 Oct 2018, 8:59 pm
நாகை, கீழ்வேளூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஹரிகிருஷ்ணனின், மகன்ஆகாஷ் நாகையில் உள்ள CSI மேனிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் நண்பரை சந்தித்து விட்டு வீடு திரும்பிய போது, ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது, ரயில் மோதி உயிரிந்தார்.
Samayam Tamil 8


இது தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாகை அரியபத்திரப் பிள்ளை தெருவைச் சேர்ந்த நாகேந்திரனின்17 வயது மகன் முகேஷ். இவர் CSI மேனிலைப் பள்ளியில் பிளஸ்-2 படிக்கிறார். இவர் தனது வீட்டில் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இவர்களின் பெற்றோர், முகேஷை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவரை சோதித்த மருத்துவர்கள் முகேஷ் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து ஒரே பள்ளியைச் சேர்ந்த ப்ளஸ் 2 மாணவர்கள் மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி