ஆப்நகரம்

கிரிக்கெட் விளையாட்டிற்கு இடையே பின்னி பிணைந்த பாம்புகள் - வைரலாகும் வீடியோ!

சத்தியமங்கலம் அருகே பின்னி பிணைந்த பாம்புகளை மொபைல் போனில் வீடியோ எடுத்து, இளைஞர்கள் வைரலாக்கி உள்ளனர்.

Samayam Tamil 12 May 2019, 7:53 pm
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த தொட்டகாஜனூரில் விளையாட்டு மைதானத்தில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது பந்து மைதானத்தை தாண்டி சென்றது.
Samayam Tamil Two Snakes.


அதனை எடுக்க சென்ற இளைஞர்கள் பந்தின் அருகே இரு பாம்புகள் பின்னி பிணைந்து இருப்பதைக் கண்டனர். உடனே தங்கள் செல்போனில் படம்பிடிக்கத் தொடங்கினர். இதுகுறித்து தகவலறிந்து அப்பகுதி மக்களும் திரண்டனர்.

இந்நிலையில் பாம்புகளுக்கு இடையே யாரும் செல்ல வேண்டாம் என்றும், அதனை துன்புறுத்தக் கூடாது என்று மக்கள் அறிவுறுத்தினர்.

சுமார் அரை மணி நேரம் பாம்புகள் அப்படியே பின்னிய நிலையில் இருந்தன. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்ததால், தற்போது வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி