ஆப்நகரம்

ஜல்லிக்கட்டு போட்டியை வேடிக்கை பார்த்த இருவர் பலி

சிவகங்கை மாவட்டம், சிரவயலில் நடந்த மஞ்சுவிட்டு போட்டியை வேடிக்கை பார்த்த இருவர் பலியாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 16 Jan 2018, 4:02 pm
மதுரை : சிவகங்கை மாவட்டம், சிரவயலில் நடந்த மஞ்சுவிட்டு போட்டியை வேடிக்கை பார்த்த இருவர் பலியாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil two spectators gored to death by bulls during manjuvirattu event in tn village
ஜல்லிக்கட்டு போட்டியை வேடிக்கை பார்த்த இருவர் பலி


பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகின்றது. ஜல்லிக்கட்டுப் போட்டியின் ஒரு பகுதியாக நடைப்பெறுவது தான் மஞ்சுவிரட்டு. ஜல்லிக்கட்டு போட்டியில் ஒரு நேரத்தில் ஒரு காளை மட்டும் வெளியனுப்பப்படும். ஆனால் மஞ்சுவிரட்டை பொருத்தளவில், ஒரே நேரத்தில் பல் காளைகள் அவிழ்த்து விடப்படும்.
அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் சிரவயலில் இன்று மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.இதில் ராமநாதன் மற்றும் காசி என்ற இருவர் காளைகள் முட்டியதால் உயிரிழந்ததுள்ளனர்.

சென்ற வருடன் ஜல்லிக்கட்டு போட்டி மீதான தடையை மாபெரும் போராட்டம் செய்து நீக்கப்பட்டது. இதனால் பல்வேறு விதிமுறைகளை வைத்து போட்டிகள் நடைப்பெற்று வருகின்றது.
இருப்பினும் சில நேரங்களில் இந்த உயிரழப்பு நடைப்பெற்று வருகின்றது. நேற்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க சென்ற 19 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார்.

அடுத்த செய்தி